இராமேஸ்வரம்
அருகே சர்ச்சில் தரைதளத்தில் பதித்த டைல்சில் இயேசு, மாதா உருவங்கள்
தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத
குழந்தையேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில்
பக்தர்கள்
கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று இரவு
இப்பகுதியை
சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் வழிபாடு நடத்த சென்றார். அமைதியான சூழலில்
ஜனார்த்தனன் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
சர்ச்சில்
ஆட்கள் நடமாட்டம் இல்லை.பிரார்த்தனை முடித்து அவர் கண்விழித்து பார்த்த
போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில்
இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி வந்து சென்றன. இதனை முதலில் மாயை என
நினைத்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருந்தன.
Powered by Blogger.
0 Responses to தங்கச்சிமடம் குழந்தை இயேசு ஆலயத்தில் ஓர் அற்புதம்